Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இறந்த மயிலுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

ஆகஸ்டு 07, 2023 10:44

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே இறந்த மயிலுக்கு அரசு
மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, கல்லங்காட்டுவலசு, உப்புக்குளம் பகுதியில் உள்ள மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் மயில் ஒன்று இறந்து கிடைந்தது.

இது குறித்து அப்பகுதி விவசாயியான விஸ்வநாதன், நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி பிரபு என்ற வனத்துறை பணியாளர் கொல்லிமலை அடிவாரத்தில் இருந்து நேரில் வந்து, இறந்த மயிலை பெற்றுகொண்டு சென்றார். வனப்பகுதியில் தேசிய பறவையான மயிலுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்